skip to main
|
skip to sidebar
கவிதை நேரம்
Showing posts with label
மு.மேத்தா
.
Show all posts
Showing posts with label
மு.மேத்தா
.
Show all posts
Monday, March 30, 2009
நீதி தேவதை
ஏ நீதி தேவதையே!
முதலில் உன் வாள்
உன் கண்கட்டை அவிழ்க்கட்டும்!!
கண்களைத் திறந்து பார்
உன் தராசுத் தட்டுகளில்
புறாவின் மாமிசத்தை
சிபிகள் உண்ண ஆரம்பித்து விட்டார்கள்
- மு.மேத்தா
முத்தம்
பேச்சுக்கு எதிராக
காதற்சபையில் நிறைவேறும்
நம்பிக்கையில்லாத் தீர்மானம்
- மு.மேத்தா
எது விதி?
முடிக்கத் தெரியாத
சிறுகதையை
குறுநாவல் என்று
கூப்பிட்ட மாதிரி
தீர்க்க முடியாத பிரச்சினைக்கு
விதி என்று பெயரிட்டு
விலகி விடுவதா..?
மு.மேத்தா
வாயில்லாச் சில்லறைகள்
சப்தமிடும்
வாய்திறந்தும் பேசாத
சுருக்குப்பை
- மு.மேத்தா
விலைமாது
இரைப்பை நிரப்ப
கருப்பையை
பட்டினியிடும் மாதர்
மு.மேத்தா
முதுமை
இறந்த காலத்தையே பாடும்
கீறல் விழுந்த இசைத்தட்டு
காலத்தின் குறும்பால்
'கார்ட்டூன்' ஆன
வர்ண ஓவியம்
நரை..
இந்த நரை
வெற்றிலை போட்ட அனுபவங்கள்
தடவி விட்டுச் சென்ற
சுண்ணாம்பு
இது..
மூச்சுக்குதிரை
ஓடிக் களைத்துத்
தள்ளிய நுரை
இந்த சுருக்கங்கள் ..
இது உயிர் எழுதிக் கொண்டிருக்கும்
ராஜினாமாக் கடிதம்
மறுப்பது போல் தலையாட்டும்
வாழ்வையா..?
மரணத்தையா..?
மு.மேத்தா
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Get the
NeoCounter
widget and many other
great free and Premium widgets
at
NeoWORX
!
வருகை தந்தவர்கள்
Free Counter
பிற சுட்டிகள்
முத்தமிழ் வளர்த்த முஸ்லீம்கள்
உதயம்
ழகரம்
சாரணபாஸ்கரன்
கண்ணதாசன்
கவி. கா.மு.ஷெரீப்
அப்துல் கையூம்
இஸ்லாமியச் சிந்தனைகள்
நாகூரின் மண்வாசனை
இறையருட் கவிமணி
குளம்பி
பூஜ்ஜியம்
ப்ரியா விடை
தேடல்கள்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxx
உள்ளதைச் சொல்வேன் நல்லதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது
View my complete profile