Monday, March 30, 2009

முதுமை



இறந்த காலத்தையே பாடும்
கீறல் விழுந்த இசைத்தட்டு
காலத்தின் குறும்பால்
'கார்ட்டூன்' ஆன
வர்ண ஓவியம்

நரை..
இந்த நரை
வெற்றிலை போட்ட அனுபவங்கள்
தடவி விட்டுச் சென்ற
சுண்ணாம்பு

இது..
மூச்சுக்குதிரை
ஓடிக் களைத்துத்
தள்ளிய நுரை

இந்த சுருக்கங்கள் ..
இது உயிர் எழுதிக் கொண்டிருக்கும்
ராஜினாமாக் கடிதம்
மறுப்பது போல் தலையாட்டும்
வாழ்வையா..?
மரணத்தையா..?

மு.மேத்தா

No comments: