Friday, March 28, 2008

அன்பு என்னும் தலைப்பில்
மிகச்சிறிய கவிதை கேட்டார்கள்
அம்மா என்று சொன்னேன்
கேட்டது அம்மாவாக இருந்தால்
இன்னமும் சிறியதாக சொல்லியிருப்பேன்
நீ என்று.

-தாஜ்
--------------------------------
எல்லாக் கவிதைகளுமே
உன்னைப் பற்றியவை தானெனினும்
ஒரு கவிதை கூட
உன்னை மாதிரி இல்லையே?"

- தபூ சங்கர்
--------------------------------
விலக விலக
புள்ளி தானே?
நீ மட்டும் எப்படி
விஸ்வரூபம்?"

- இரா. பார்த்திபன்

--------------------------------
ஆயத்தங்களில்
கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல்.."

-பசுவய்யா (சு.ரா)
--------------------------------

வலியின் ஒலி

வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசம்பலை

- மகுடேசுவரன்
- நன்றி : ஆனந்த விகடன் (2002)

--------------------------------
இமாலய முன்னேற்றம்
இந்தியா முழக்கம்

இரும்புக் கம்பியால்
குரும்பு வடிவில்
ஒரு கூண்டு

என் வீட்டு வாசலில்
ஜீரோ வால்ட் பல்புக்கு.

- அப்துல் கையூம்
--------------------------------

No comments: